Monday, August 26, 2019

மகளே வா!

என்
விந்திட்ட வினை
வினையிட்ட விதை 

உதிரத்து உதயம்
தேகத்து அசல் நகல்

என்
மண வாழ்வின் சாட்சி
மரபணுவின் நீட்சி

என்றோ வரும் 
என் முடிவுரைக்கு
தயாராய்  நானியற்றும் முன்னுரை

மகளே வா! 
வளர்வோம் வா!
குழந்தையாய் நீயும்,
  தந்தையாய் நானும் !






No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...