Saturday, December 22, 2012

Democratize do not denigrate

 I really wonder why the term "பாயும்" is used to apprehend or deter some one under Goondas Act. குண்டர் சட்டம் "பாயும்". Why Goondas Act alone "பாயும்" but such an attribution is missing under other acts.Matterku வர்றேன்.

The Chief Minister of Tamilnadu has proposed in the recent Collectors' and Police Officials' meeting that  Goondas Act would be invoked to curb cyber crime and even first time offence causing serious impact would entail invoking of Goondas Act. Although  there is nothing officially known as Goondas Act,it is being referred to the actual act of "Tamilnadu Prevention of Dangerous Activities Act,1982".

Goondas Act is a Preventive Detention Act that empowers the Law & Order establishment to detain someone to maintain public order even without giving him enough opportunity to proceed with his case through Legal Counsel and without informing him about the ground of arrest which are fundamental rights when detention is made under any other acts.

Constitutionally speaking both the Union and State Governments are empowered to devise such acts in order to maintain public order and to maintain the security of State and with respect to matters connected with maintenance of essential services and commodity.

Though the provision of  Preventive Detention under Indian Constitution itself is being termed as Anti-Human in the International Fora due to its utility even under non-emergency exigencies,the practical  application of Preventive Detention Acts by the executives vindicates such proposal domestically.

However the increase in number of cyber crimes and its ramification over a larger section of people might necessitate stringent laws to handle such crimes in the current situation.The Nigerian Scam,Financial Data Piracy,Misuse of Communication Devices etc are to be handled with iron hand to protect the larger section of innocent people who are increasingly utilizing
new modes of communication and service without much awareness about its utility and vulnerability.

The Union government's recent decision to directly transfer subsidies to the bank accounts' of beneficiaries would result in infinite no.of people accessing the mobile devices[hand held ATMs] and it is no ones secret that the larger section of those people would be digitally illiterate if not functionally illiterate.This would exacerbate the already soaring impacts of cyber crimes both economically and socially.Also is the growing computer network based sophistication of vital establishments like Defence,Energy,Finance which makes the national security contingent on cyber defence.

Cyber crime is covered under IT Act of Union of India which is the sole legal enactment currently available against act of cyber offences.My friends in Software Industry,please don't get annoyed whether it is Income Tax Act and come to a prejudiced conclusion that government is going to add one more perk of your salary under a taxable component.Rather you can try to lobby the government that your employers' are bringing many of your salary components out of Basic Salary thereby reducing their and your own mandatory contribution to Provident Fund. At least be informed that one such move by government against this malpractice was successfully lobbied by your employers and is deferred.

Information Technology(IT Act,2008) in addition to legalising punishments for cyber offences also legally recognizes electronic transactions(financial,storage) replacing paper based one.But it is notorious for its vague provisions and associated avenues for misinterpretations.Section 66A of the IT Act empowers the law and order establishment to detain some one up to 3 years for sending offensive,menacing,annoying,false,hatred,insulting etc messages through computer and other communication devices.

Sending such messages is certainly abusive if the ambit of such grounds are properly defined and without such clarity it provides larger milieu for the public establishment to utilize the provision arbitrarily.Also no similar provisions with such stringent punishments are available when such messages are sent offline through air,print media.Even the punishment for causing death by negligence is much lesser than that proposed under this law.The recent arrests under this section in Maharastra,Puducherry,West Bengal is a quintessential vindication of such abuse and is even against the Fundamental Right of freedom of speech and expression.

However Freedom of Speech and expression is not extensive and is restricted under certain grounds like public order,decency,morality,relation with foreign nation to name a few.So any comments and discussions that flood in the newer modes of communication have to be on compliance to such legalities without fail.People talking about rights should also be aware of their duties.

Fundamental Duties(Indian Constitution).-

It shall be the duty of every citizens of India-

(a) to abide by the Constitution

Comments about cine actors,political leaders mainly based on their individual personality,abusive languages and videos etc are blatant violation of provisions of freedom of expression and it is high time individuals restrict themselves rather than expecting a third party to discipline them.While the larger part of the society is critical about the misuse of IT Act,many denigrating comments in the internet strictly warrant detention under this act even under the strictest interpretation of the act.I do also believe this act is hence under utilized in addition to being abused.

Deliberate,Discuss,Dissent,Decide are the primary ingredients of a functioning Democracy like ours.
                                               Democratize do not denigrate.

Saturday, December 15, 2012

மகள் புராணம்


தன் இரு விரல்களின் இடையில் திருநீறு எடுத்து,கண்களை மூட சொல்லி,நெற்றியின் நடுவே அவள் வைக்கும் போது,எனக்கு மட்டும் அல்ல,கார்ல் மார்க்சுக்கு கூட கடவுளிசம் பிடிக்கும்.

                       

*********************************************************************
 என்னோடு நடக்கையில் என்  ஆள்காட்டி விரலை தன் ஐந்து விரல்களால் இறுக பிடித்து,தெரியாத முகம் யாராவது அவளை பார்த்து சிரித்தால் என் கால்களுக்கு இடையில் தஞ்சம் தேடும் போது , என் மீது எனக்கே நம்பிக்கையை தருகிறாள்.

**************************************************************************

கடுகை "அகுது" என்றும்,மத்தாப்புவை "அப்பாத்து" என்றும்,என்றோ பார்த்த யானையை "நேற்று நான் பார்த்தேன்ல அந்தததததத  யானையா ?" என்றும் சொல்லும் அவள் மழலை சொல்லின் இலக்கண பிழைகளும்,சொல் பிழைகளும்  தமிழின் புதிய இலக்கணமாய் மாறுகிறது.

************************************************************************
பல்லியின் வாயில் அகப்பட்ட பூச்சிக்காக ஏங்கும் போதும்,

மழையில் நனையும் தெருவோர நாய்க்குட்டியின் "அம்மா DOG எங்கே"?அதுக்கு யாரு மம்மம் ஊட்டுவா? என்று கேட்கும் போதும்,

SUN ஏன் வெளில வெயில இருக்குது? அதுக்கு கசகசன்னு இருக்குமோ? என்கிற  போதும்,

உளவியலையும்(psychology) அறிவியலையும் ஒரு சேர அவளே உணர்த்துகிறாள்.

****************************************************************************

ஆடை குறைப்போடு இருக்கும் நடிகர் நடிகை புகைப்படங்களை பார்க்கும் போது "ஐயய,இந்த Uncle Dress Change பண்ணல,SHAME SHAME ! " என்று சிரிப்பாள்.




****************************************************************************

பயணங்களின் போது எதிர் வரும் மலையை பார்த்து,Mountain என் கூடவே வருது என்று அழுது, அவள் தந்தையின் கைகளை பற்றி கொண்டு,"Mountain போ,எங்கப்பாட்ட சொல்லி கொடுத்துலுவேன் " என்று அவள் தந்தையை மலை  விழுங்கியாய் ஆக்குவாள்.

****************************************************************************

எதிர் வீட்டில் இருக்கும் எங்களுக்கு எதிராய் செயல்படும் ஒருவரின் வீட்டு கொடியில் தொங்கும் அழுக்கான வேட்டியை  பார்த்து "Dirty யா,இருக்கு.New Dress வாங்கி கொடுப்போமா?" என்கிறவள்,பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று எங்களுக்கும் மெய்ஞானம் கற்பிப்பாள்.

****************************************************************************

 சுவரில்அவள் கிறுக்கல்களும்,ஆங்கில அகராதியில் (Dictionary) பூச்சாண்டி என்று சொல்லி அவள் வரைந்த இரண்டு கோடுகளும், மடிகணினியின் விசைதட்டிலிருந்து (Laptop Keypad) பெயர்த்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களும் அவள் மலழை அடையாளமாய் கோபமின்றி எங்கள் வீட்டில் இருக்கிறது.

***************************************************************************

ஐஸ் கிரீம் வாங்கி தரவில்லை என்றால் வானம் பார்த்து "சாமி , ஆஜுப்பா(நான் தான்) சொன்னாவே கேட்க மாட்லான், நீ Note பண்ணிக்கங்க.அப்புறமா Punish கொடுங்க  ன " என்று கடவுளுக்கு வேலை கொடுப்பாள்.

****************************************************************************

அவள் தாய் வீட்டுக்கு சென்றால் "ஸ்தோத்திரம்,அல்லேலூயா,ஏசப்பா" என்று பிரார்த்தனைக்கு மண்டியிட்டு தயாராகும் அவள், எங்கள் வீட்டில் இருக்கையில் என் அம்மாவுடன் சேர்ந்து "ஓம் சக்தி,பிள்ளையார் சாமி"
என்று விளக்கேற்றி பூஜைக்கு தயாராகி, தன்னை இடம் பார்த்து பொருத்தமாக்கி கொள்கிறாள்(adaptation).

****************************************************************************

கடந்த 27 வருடங்களில் எனக்கு என் பெயர் உபயோகப்பட்டதை விட அதிகமாய் சென்ற 6 மாதங்களில் அவளுக்கு உபயோகம் ஆகிருக்கிறது.

**************************************************************************** 

Wednesday, October 31, 2012

மறுபடியும் அவள்

             என்றாவது  தனிமையில் இருக்கையில் எதையாவது பற்றி சிந்திக்கவோ இல்லை எழுதவோ நினைத்தால் எனக்குள் தோன்றும் இரண்டாவது தலைப்பையே பெரும்பாலும் எழுத நினைக்கிறேன்.முதல் தலைப்பு சமீப காலங்களாக "அவளை"ப் பற்றியே இருப்பதால் எடுத்த முடிவு இது. எனினும் சில மாதங்களாக எதையும் எழுதாத நான் இன்று,எழுத,அந்த முடிவே நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற நினைப்புடன், அவளைப் பற்றி மறுபடியும்.

                        இருபதுகளில் ஒரு ஆணின் சிந்தையில் "அவள் " என்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அதுவும் காதலை ஒழித்து வைத்தும்,மறுக்கப்பட்ட காதலிலும்   வாழும் ஆண்கள் பார்க்கும் பொருள்களும் மனிதர்களும் அவள் சார்ந்த நினைவுகளையே தரும். 

நிற்க.

நான் எழுத விழைந்த "அவள்" இவள் அல்ல .என்னவள் "மகள்".   

அன்பு மகளுக்கு,
                              இதைப் படிக்க முடியாத,படித்தால் புரியாத உனக்கு உன் பிரியமான சித்தப்பாவின் கடிதம் இது.எடுத்து உரைக்கப்பட்ட அன்பை விட எழுதி உரைக்கபட்டவை இன்னும் ஆழமானவை.மறுபடியும் படிக்கும் வாய்ப்பும்,படிக்கும் ஒவ்வொரு முறையும் தன் உன்னதம் கூட்டும் சௌகர்யமும் எழுத்து வடிவிற்கு உண்டு.எனவே இக்கடிதம்.கடிதத்தின் நீளத்தை வைத்து அதை படிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யும் வழக்கம் என்னைப்போல் உனக்கும் இருந்தால் இக்கடிதத்திற்கு மட்டும் விலக்கு கொடு.

                         எழுதுவது முடிவாகிவிட்டது.என்ன மொழியில் எழுதுவது? மொழியின் கை பிடித்து நடக்க கற்றுக் கொண்டிருக்கும் உனக்குப்  புரிந்த கடவுள் மொழியில் எழுத எனக்குத்  தெரியாததால் நம்மொழியில் தொடர்கிறேன்.நம்மொழியை நீ நிச்சயம் கற்றுக்  கொள்வாய் என்பது அடுத்த காரணம்.
                           இரண்டு வருடங்களுக்கு முன், நீ வர போகிறாய் என்பது முடிவானாலும் யாராய் வருவாய் என்பது முடிவாகாத காலத்தில் உள்ளுணர்வில் நாங்கள் அனைவரும் உனக்கு பெண் வடிவமே கொடுத்தோம்.உன் பெயர் இது தான் என்று நீ பிறக்கும் முன்னரே முடிவு செய்யப்பட்டது உனக்கு தெரியுமா?
                       
                         அறுவை சிகிச்சை அறையின் வெளியே கைப் பிசைந்து நின்ற நாங்கள்,உன் அழுகைக் குரல் கேட்டதும்,இலேசாக கதவு திறந்து எட்டி "பாப்பா பிறந்திருக்கிறாள்" என்று சொன்ன செவிலியிடம் முந்திக் கொண்டு உன்னைப்  பார்க்க முயற்சித்ததும்,உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை செல்லமே.உன்னிடம் மட்டும் ஒரு உண்மை சொல்கிறேன்.நீ நலமாய் இருக்கிறாயா என்பது மட்டுமே என் எண்ணவோட்டத்தில் இருந்தது.அறுவை சிகிச்சை செய்து கொண்ட அண்ணி என்னவானாள்  என்று நான் நினைத்திடவே இல்லை அன்று. 
                            
                           செவிலி பெண் உன்னை ஒரு பஞ்சு துணியில் எடுத்து வெளியில் கொண்டு வந்ததும்,என் அம்மா உன்னை கைகளில் வாங்கியதும்,என்னிடம்அவள் உன்னை தர,கையில் எடுக்க எனக்கு இருந்த அச்சமும்,எடுக்க மறுத்ததும் இன்றும் ஞாபகம் இருக்குதடி சின்னவளே. அன்று நீ எப்படி இருந்தாய் தெரியுமா?இதோ.

ஏதோ ஜப்பானிய குழந்தை போல் உனக்கும் தோன்றுகிறதா உன்னைப் பார்த்தால்?


                                கால் நூற்றாண்டாய் பெண் குழந்தை இல்லாத நம் வீட்டிற்கு நீ கொண்டு வந்தது வெறும் வெளிச்சம் மட்டும் இல்லை கண்ணே,ஒவ்வொருவருக்கும் புது உறவு முறைஅங்கிகாரம்.என் தந்தை தாத்தா ஆனார்,அம்மா அப்பம்மா ஆனாள்.நான் சித்தப்பா ஆனேன்.என் அண்ணனும் அண்ணியும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கான சான்றை பெற்றார்கள்.இந்தியாவின்  இன்னும் ஒரு பெண் குழந்தை நீ, நம்வீட்டில் முதல் பொன் குழந்தை நீ தானே.

                           உன் தாய் வழி தாத்தா வீட்டில் நீ இருந்த முதல் 40 நாட்கள் எவ்வளவு நீளம். நிலமும் நிலவும் அந்த 40 நாட்கள் மட்டும் ஏன் மெதுவாக சுற்றியது என்று இன்று வரை பதிலில்லை.வேலை தேடுபவன் பகலும்,நோயாளியின் இரவும் போல அந்த காலம்,ஐயயோ  கொடுங்காலம்.

                         வேலைக்கு செல்லும்போது சனி ஞாயிறுகளை மனதில் வைத்தே தொடங்கும் ஒவ்வொரு திங்கள் கிழமை போல,உன்னைப்  பார்க்க வரும் தருணம் சுற்றியே மற்ற நாட்கள் ஓடும் காலம் அது.உன்னைப் பார்க்கும்  தருணமும் அதில் நீ தரும் நினைவுகளும் அடுத்த முறை உன்னைப் பார்க்கும் வரை பிரிவைத் தாங்கும்.அந்நாட்களில் கடவுளை தரிசிக்க  வரும் பக்தன் போலவே நம் உறவு நின்றது.

                       நெல்லையிலிருந்து குமரிக்கு எங்கள் குமரி வந்த காலம் தானே வசந்தகாலம்.இன்று நீயே எங்கள் நிகழ் காலமும்,வருங்காலமுமாகி வளர்ந்திருக்கிறாய்.உன்னைப் பார்க்க வந்த நம் சொந்தத்தினர் நீ உன் தந்தை போலவும்,என் தந்தை போலவும்,என் தாய் போலவும் இருக்கிறாய் என்று அவரவர்க்கு பிடித்த ஜாடை சொன்னார்கள்.
என்னைப் போலவும்,உன் இன்னொரு சித்தப்பாவைப் போலவும் இருக்கிறாய் என்று சொன்னவர்களும் உண்டு.ஒருவேளை உன் தாய் வழி சொந்தங்கள் அவர்கள் குடும்ப வழியில் உன்னை அடையாளம் கண்டிருப்பார்கள்.புரிகிறது.அந்த வயதில் நீ யார் போல் இருந்தாய் என்பதை நீயே முடிவு செய்ய இதோ ஒரு ஆணின்  புகைப்படம்.

                             யாராய் இருப்பினும் எல்லோருக்கும் பொதுவான  உருவமாய் நீ அறியப்பட்டது ஒரு தேவதையாய்.வெள்ளை நிற ஆடை இல்லை,பின்னோட்டத்தில் இசையும் இல்லை,முதுகு ஒட்டி இறகும் இல்லை,எனினும் நீ தேவதை.தேவதைக்கான அந்த அடையாளங்கள்  யாரோ ஒருவரின் கற்பனைக்கான ஒப்பனை.நீ உண்மை.உன் மெய் தேவதை.

                               நீ பேசிய முதல் மொழி உனக்கு ஞாபகம் வருகிறதா?அது அழுகை."எல்லா குழந்தயும் பேசற மொழி தான சித்தப்பா" என்று நீ இன்று சொல்வது புரிகிறது.குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரும்பாலும் பெண்கள் அதிகமாய்,புலமையோடு பேசும் மொழிகளில் அதுவும் ஓன்று என்பது உனக்கும் தெரிய வரும்.அழுதே நீ சாதித்த காரியங்கள் எத்தனை எத்தனை.இந்த கடிதம் உனக்கு புரிய வரும் காலத்தில் நீ அழுது சாதித்தவை பல கடல் தாண்டியிருக்கும்.

                             நீ அழுவாய்,உடனே சிரிப்பாய்,உன் வாய் திறந்து கை சப்புவாய்,உளறுவாய்,
சிணுங்குவாய்.கை உயர்த்தி ஜாடை மொழி பேசுவாய்.குப்புற கவிழ முயற்சித்து ஒரு புறம் சாய்வாய்,அடுத்த கை வெளியில் எடுக்க முடியாமல் சாய்ந்து கொண்டே அழுவாய்.ஒரு நாள் குப்புற கவிழும் வித்தை கற்று கொண்டாய்.சிரித்த முகத்துடன் தூங்கி எங்களின் ஆயுசு கூட்டினாய் அன்று.
                       


                                    குப்புற கவிழ நீ கற்றதும் உன் அடுத்த கட்ட வளர்ச்சிகள் இன்னும் வேகமாகவே  இருந்தன.குப்புற தரை பார்த்திருந்த நீ ஓரிரு நாட்களில் கழுத்து உயர்த்தி முகம் பார்க்கவும் செய்தாய்.அடுத்த சில வாரங்களில் உன்னை இருத்தி வைத்தால் எவர் பிடியுமின்றி நீயே சாயாது உட்கார பழகினாய்.அடுத்த முயற்சி இன்னும் சிறந்தது.நம் வீட்டு தரைகளுக்கு உரிமை கொண்டாடி தரையெல்லாம் தவழ்ந்தாய்.நீ தவழ்வாய் என்பதற்காகவே அத்தரைகள் தங்களை சுத்தமாக்கி  தவமிருந்தது போல் காத்திருக்கும்.தரையை பார்த்து பொறாமையுடன் உன்னை சொந்தம் கொண்டாட அடுத்தது சுவர் காத்திருந்தது. 


                            தானே உட்கார கற்றுக்கொண்ட நீ தூங்கி எழுகையில் அம்மாவென்று அழைத்து நீயே உட்கார்ந்தாய்.அடுத்தது  சுவரையும் ஏமாற்றாமல் அதை பிடித்து நிற்கவும் கற்று கொண்ட நீ வாழ்க்கையின் நடைக்கு உன்னை தயார்படுத்தினாய்.எழுந்தாய்,விழுந்தாய்,நடந்தாய்.
முதலில் மற்றவர் உதவியுடன் பின்பு எவர் துணையும் இன்றி.இது தான் வாழ்க்கையின் தத்துவம் என்று எனக்கு நீதான் உணர்த்தினாய்.
தத்தி தத்தி நீ நடந்ததும்,விழுந்ததும் அழுததும்,
உடனே சிரித்து எழுந்ததும் இன்றும் கண்களில் பிம்பமாய் நிற்கிறதே கண்மணியே.

                         இவை உன் வாழ்வின் முதல் வருடம் தான்.இன்னும் எழுத ஒரு முழு வருட நிகழ்வுகள் உண்டு.மெதுவாய் தொடர்கிறேன்.


இப்படிக்கு,

ராஜுப்பா.



                                          

Thursday, July 12, 2012

பலாபழம் பாழாக்கும்


எங்க பெரியம்மா அப்பவே சொன்னாங்க "தம்பி,ரெண்டு ரூபா கொடுத்துட்டு போணு ",அவுங்க சொன்னத ஒழுங்கா கேட்டுருந்தா சண்டையே வந்துருக்காது .

" வீட்ட கட்டிப்பார் கல்யாணம் செஞ்சிபார்னு " ஊர்ல இப்போவும் மக்கள் சொல்வாங்க.ரெண்டுலயும் இருக்கிற கஷ்டத்த பத்தி இதுல சொல்ல முயற்சி செஞ்சிருப்பாங்கன்னு  நினைக்றேன்.இருந்தாலும் இப்போ பெரும்பாலும் ரெண்டையுமே மக்கள் சிரமம் இல்லாம செய்ய ஆரம்பிசிட்டாங்க.

Building contract,Labour Contract,Material contract அப்படின்னு Outsourcing Concept  நமக்கே தெரியாம நாமளே promote பண்றோம்.இருந்தாலும்  நடுத்தட்டு வர்க்கத்து மக்கள்கிட்ட "Building Outsourcing" போய் சேர்ந்தது  மாதிரி கல்யாண Contract போய் சேர்ந்திடல.குறைந்தபட்சம்  எங்க ஊர்ல மக்களுக்கு இந்த கல்யாண Contract மீது அவளவு ஈடுபாடு இல்லனு சொல்ல முடியும்.

இப்போவும் நம்ம ஊர்ல மக்கள் கல்யாணம்னா குறஞ்சது ஒரு மாசத்திற்கு முன்னாடியே ஒரு படபடப்போட அதற்கான வேலைய செய்றாங்க.எங்க வீட்ல சமீபத்துல நடந்த திருமண விழாவோட அனுபவம் இது.நம்ம படபடக்றோமோ இல்லையோ கூட இருக்கிற சொந்தங்கள் டென்ஷன் படுத்திடுறாங்க.

நம்ம நாட்ல கிட்டத்தட்ட அறுபது சதவித மக்கள் விவசாயம் செஞ்சாலும் ஒரு Software Engineer பொறுத்த வரைக்கும் Software Engineers தான் அதிகமா இருப்பாங்கனு சொல்வான்.அந்த அளவுக்கு இப்போ SW Engrs நாட்ல அதிகம் ஆகிட்டதா ஒரு பிரம்ம.White Collared Job னுறது எல்லாம் SW Engr Jobஆ பார்க்கபடுது.

.Auto டிரைவர்ல இருந்து Apartment Owner வரைக்கும் SW Engrs பேர சொல்லியே விலை ஏத்திட்டாங்க.SW Engrs சிரமம் இல்லாம புக் பண்ணிடுராங்கன்னு சொல்லி அரசாங்கமே Railway Tatkal Reservation System மாத்திருக்காங்க. SW Engr மாப்பிள்ள தான் வேணும்ன்ற காலம் போய் "SW Engrs, Please  Excuse" காலம் பத்து வருஷத்துக்குள்ளே வந்துடுச்சு.அது வேற பிரச்சன.

கல்யாணத்த பொறுத்த வரைக்கும் பெரிய வேலை என்னன்னு என்ன கேட்டா "திருமண அழைப்பிதழ்" கொடுக்கறதுன்னு சொல்வேன்.மேல்தட்டு சமூகத்திலும் நம்ம மாமா SW Engrs கலாச்சாரத்திலும் இருக்கிற "e-mail Marriage
Invitation " concept நமக்கு வேலைக்கு ஆகாது.

Internet Access னறது நம்ம நாட்ட பொறுத்த வரைக்கும் ஒரு Luxury.6% மக்களுக்கு தான் அது கிடைக்கிறதா சொல்றாங்க.அதனால  எங்க சொந்தங்களுக்கோ ஊர்காரங்களுக்கோ இந்த மாத்ரி அனுப்ப முடியாது.

 இல்லைனா எல்லாருக்கும் ஒரு காசு செலவு இல்லாம "e-mail invitation" அனுப்பிட்டு இருந்தடலாம்.யாருக்காவது அனுப்ப மறந்துட்டா கூட மச்சான் அனுபிட்டேன்டா உனக்கு Delivery ஆகலையானு கேட்டுடலாம்.பத்திரிக்க அடிக்கிற செலவும் மிச்சம்.

வெளியூர்ல இருக்கிற சொந்தக்காரங்களுக்கு வேணும்னா Indian Post ல அனுப்பிட்டதா அடிச்சு விடலாம்."என்னங்க மாமா ,தபால் வந்து சேரலயானு ?" கேட்க முடியும்.தபால் துறை மந்திரி கபில்சிபிலுக்கே தெரியும் Post Man ஒழுங்கா Delivery பண்ண மாட்டார்னு.

போதாததுக்கு சொந்தக்காரங்க மரியாத வேற எதிர்பார்பாங்க.பொண்ணு மாப்பிள்ள பேர விட தன்னோட பேரு பத்திரிகையில இருக்குதான்னு பார்பாங்க.தனிப்பட்ட முறையில் போய் அவங்களுக்கு பத்திரிக்க கொடுக்கணும்.அதுலயும் ஒரு நல்லது இருக்கு.

நமக்கே தெரியாத நம்ம சொந்தபந்தங்கள,அவங்க வீட்ட நமக்கு நாமளே அறிமுகபடுத்திக்க வேண்டியது தான்.நேரம் இல்ல ,"Time Waste" னு சொல்ல முடியாது.

இப்படிதான் எங்க அம்மாவோட அம்மம்மாவோட சொந்ததில ஒரு வீட்டுக்கு பத்திரிக்க கொடுக்க போயிருந்தோம்.மிக பெரிய போராட்டதுக்கப்புறம் அவங்க வீட்ட கண்டுபிடிச்சி போனா அந்த வீட்ல ஒரு பாட்டியும் ஒரு அம்மாவும் இருந்தாங்கா.அந்த பாட்டிய எங்கம்மா எனக்கு பெரியம்மானும் அந்த அம்மாவ எனக்கு அக்காணும் அறிமுக படுத்தினாங்க.

கொஞ்ச நேர நல விசாரிப்புக்கு அப்புறம் எங்க அம்மாவும் அவுங்க அக்காவும் அரை மணிநேர FlashBack க்கு போய்ட்டாங்க.சினிமானா எந்திருச்சுபோய் ஒரு தம்மு போட்டுருக்கலாம்.இப்போ ஒன்னும் முடியல.அந்த பழைய வீட்டோட விட்டத்த அண்ணாந்து பார்த்துட்டே தூங்கிட்டேன் .

திடீர்னு எங்கம்மா ஒரு கோணி பையோட வெளில வந்தாங்க.எங்க பெரியம்மா என்ன எழுப்பி  "மக்ளே,ஒரு ரெண்டு ரூபா துட்டு  கொடுத்துட்டு போ மக்கான்னு "சொன்னாங்க.எங்கம்மாட்ட எதுக்குன்னு கேட்டதுக்கு அவங்க ரெண்டு பலாபழம் தந்ததா சொன்னாங்க.

பெரியம்மா சொன்னாங்க
"பலாபழம் சொந்தகாரங்களுக்கு கொடுத்தா 1 ரூபா வாங்கிடனும்.இல்லைனா குடும்பத்துக்குள்ள சண்ட வந்துடும்னு." ரெண்டு பலா பலத்துக்கு ரெண்டு ரூபானு எங்க பெரியம்மா தெளிவா சொல்லிட்டாங்க.

ஐயோ பெரியம்மா என்ன நீங்க பேசறீங்க அதெல்லாம் ஒன்னும் சண்ட வராது.நீங்க பழத்த கொடுங்க நான் கார்ல வச்சிட்ரேனு சொன்னேன்.அவங்க விடவே இல்ல.கண்டிப்பா வேணும்னு அடம் பிடிச்சாங்க.

எப்படியாவது அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆகிடுவோம்னு பர்சில காசு தேடினா சில்லற காசு கிடைக்கல.பத்து ரூபா நோட்ட அவங்ககிட்ட கொடுத்தா அவங்க "யாம்ல,உனக்கு சொன்னா தெரியாதா ?ரெண்டு ரூபா கேட்டா பத்து ரூவா தாள தர.பலா பழத்தால எத்தன குடும்பம் பாழா போயிருக்கு தெரியுமான்னு" வரலாறு பேச ஆரம்பிசிட்டாங்க.
"பக்கத்துல பெட்டிகட இருக்கு,அதுல போய் ஒரு புளிப்பு முட்டாய் வாங்கிட்டு வந்து சில்லறய தானு" order போட்டாங்க.அவங்களுக்கு எப்படி புரிய வைக்கலாம்னு யோசிச்சிட்டே இருந்தா,

நடுவில எங்கிருந்து தான் வந்தாங்களோ அரண்மனை கிளி படத்துல வர ராஜ்கிரனோட ஆத்தா மாத்ரி ஒரு தாய் கிழவி ஓடி வந்து
"ஏண்டி,உன்னோட சொக்காருனுங்க தான் உன்ன மதிக்கறது இல்ல தெரியும்ல .பாரு நீ சொல்றத அந்த பொடிப்பையன் கேக்குறானா .
நீ ஏண்டி அவனுகளுக்கு என் வீட்டு சக்கபழத்த கொடுக்றனு "  பெரியம்மாவோட குடிமிய பிடிச்சாங்க.

என் கையில இருந்த ரூபாவ பிடுங்கிட்டு எங்கம்மா சட்டுன்னு போய் புளிப்பு மிட்டாய் வாங்கிட்டு அவங்ககிட்ட 2 ரூபா துட்டையும்  கொடுத்தாங்க.
"கொஞ்ச நேரத்தில சக்கபழம் அது வேலைய காமிச்சிட்டு பார்த்தியான்னு"
'அரண்மனை கிளி ஆத்தா' சொன்னாங்க.அவுங்க வீட்ட விட்டு வந்துட்டோம்.

நான் ஒரு முட்டாள்,விஞ்ஞானமே தெரியாம இருக்றேன்.
எங்க பெரியம்மா அப்பவே சொன்னாங்க "தம்பி,ரெண்டு ரூபா கொடுத்துட்டு போணு ",அவுங்க சொன்னத ஒழுங்கா கேட்டுருந்தா சண்டையே வந்துருக்காது.

இருந்தாலும் இதுல இருந்து நான் ஒன்னு தெரிஞ்சிகிட்டேன்.
'அரண்மனை கிளி ஆத்தா' எங்க பெரியம்மாவோட குடிமிய பிடிச்சத பார்த்தா அவுங்க தான் மாமியாரா இருப்பாங்க.

Saturday, April 14, 2012

அழகு

காதலியின் காதலை விட
கடு(கு)கை "அகுது" என்ற
மழலை சொல்.

Monday, February 20, 2012

தெய்வம் மச்சான், நீ.

"pink புடவைல அவ தேவதை மாத்ரி இருந்தா.தேவதை யாரும் பார்த்தது கிடையாது.இருந்தாலும் ஒவ்வொரு காதலனுக்கு மட்டுமே தெரிஞ்ச உருவம் அது.

trainla அவ திடீர்னு கைகள இறுக்கி பிடிச்சு நெஞ்சில தலை சாய்ச்சு படுத்தா.அந்த இறுக்கத்தில இனிமேல் நீ தான்டா என்னோட வாழ்க்கைன்னு அவ சொல்ல நினைச்சிருக்கலாம்.பதுக்கி வைச்சிருந்த பாசத்தோட
வெளிப்பாடு அது.

இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு. 

"டக் டக் டக்"

 கடமைக்கு கதவ தட்டி, உரிமையோட யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டது.நான் TTEனு நினைச்சு என்னோட e-டிக்கெட் வெளில எடுக்கிறேன்."
...................................
..................................
..................................
..................................
'தம்பி....தம்பி'

நிமிர்ந்து பார்த்தா எங்க அம்மா நிக்கறாங்க.

"எழுந்திருப்பா,Class போகணும்ல.சீக்கிறோம்"

அடச்சீ.....கனவா?
இன்னும் எத்தன நாள் தான் இப்படியே போகும்னு தெரியல.இப்படி ஏக்கத்திலே ஒவ்வொரு நாளும்,நமக்கு பழகி போச்சு. புறப்பட்டு College கிளம்பினேன்.

Classku போனதும் நவின்ட நடந்தத சொன்னேன்.என்ன பத்தின எல்லா ரகசியங்களையும் தெரிஞ்சவன் அவன்.என்னால அவனும் அவனால நானும் கெட்டதா மாத்தி மாத்தி எங்க ரெண்டு பேர் வீட்லயும் திட்டுவாங்க.

"மச்சி,உன் காதல் சூப்பர்டா. கனவுலே Diamond Jubilee கொண்டாடும் போல இருக்குதேன்னு" சொன்னான் அவன்.

அவன் சொன்னது எனக்கு கேட்கல.இத நீங்க சொன்னாலும் கேட்காது. 

என் பேரு.....அத விடுங்க.என் பேர்ல ஒன்னும் சுவாரஸ்யம்  கிடையாது.12th stdக்கு  அப்புறம் Engineering Collegenu எழுதபடாத தமிழ்நாட்டு மிடில் கிளாஸ் சட்டத்துக்கு விருப்பமில்லாத புது வரவு நான்.

Eligibility marks இருந்தாலே கிடைக்கிற Eng.admission எனக்கும் கிடைச்சது.காலேஜ்ல முதல் பெஞ்சுக்கும் கடைசி பெஞ்சுக்கும் தான் எப்பவுமே அதிகமா Demand இருக்கும்.நமக்கு மாப்பிள பெஞ்ச்ல comfortableaa இடம் கிடைச்சது.

புது மாபிள்ளைக்கு இல்லாத சௌகர்யம் கூட மாப்ள பெஞ்ச்ல கிடைக்கும்.தயிர் சாதத்திலிருந்து கோழி குருமா வரைக்கும் மணக்கிற இடம் அது.காணாம போற Tiffin Boxகள் தவறாம கிடைக்கிற இடம் கூட.அதுவும் ஜன்னலோர மாப்பிள பெஞ்ச் எப்பவுமே ஸ்பெஷல் தான்.

8th std வரைக்கும் ஒழுங்கா தான் படிச்சிட்டு இருந்தேன்.இப்போ 'நானும் நல்ல படிப்பேன்' அப்படின்றது ஒரு இறந்த கால தகவல்.

ரேவதி----அவ தான் அவ.என்னோட இறந்த கால தகவலுக்கான காரண கர்த்தா.

காட்டு கூந்தல்
வில் நெற்றி
கிளி மூக்கு
பச்சரிசி பல்லு
பவள வாய் இதழ்

இப்படி எல்லாம் அவ அழக வர்ணிக்க எனக்கு தெரியாது.

நல்ல மைதா மாவு முகத்தில அப்பின மாதிரி இருப்பா.
எண்ணெய் தேய்க்காம செம்பட்டையான தல முடி
சின்னதான தன்னோட பழைய pantsஅ 3/4thஆ போட்டு modernஆ இருப்பா.    
Lady Bird Cycle போய் Light Blue Scooty- இது அவளோட அடையாளம்.
எனக்கு அவள பிடிச்சது.

9th  stdல அவளோட ஸ்கூட்டி பஞ்சர் ஆனதும்,ஒரே tuitionla படிக்கிறதுனால என்ட உதவி கேட்டா.'Thanks' இது தான் அவ என்ட பேசின அன்பான வார்த்த.அதுக்கப்புறம் அவ முழு நேர Securityaa என்ன நானே appoint பண்ணிக்கிட்டேன்.Part timeaa தான் ஸ்கூலுக்கே போனேன். 

இப்படி பல நாட்கள் அவ பின்னாடி அலைஞ்சாலும் அவளோ நானோ எதுவும் நேரடியா பேசினது இல்ல.அவ காலேஜ் மேட் மூலமா அவள்ட பேச try பண்ணினதும், நடக்கல.

சரி,இன்னைக்கு எப்படியாச்சும் அவள்ட சொல்லிடலாம்னு அவ காலேஜ் பஸ் ஸ்டாப் பக்கம் போனேன்.காலேஜ்ல இருந்து அவ அப்போ தான் மெதுவா நடந்து வந்திட்டு இருந்தா.என்ன பார்த்ததும் சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சா.

அவளும் நம்மள மாதிரி கனவு கண்டுருப்பாலோனு நினைச்சேன்.இல்லாத தைரியத்த வரவழைச்சு அவ பக்கம் பொய் நின்னேன்.அவ கண்ண பார்த்தது தான்,மொத்தமா நான் அவுட். 

திடீர்னு யாரோ பேசறது மாதிரி இருந்தது.

"ஹே,ராஜேஷ்.நீ எப்படி இருக்கன்னு கூட நான் கேட்க மாட்டேன்.
உன் நல்லதுக்கு நான் சொல்றேன்.
தயவு செஞ்சு என்ன follow பண்றத விட்டுட்டு இனிமேலாவது உறுப்படியான வேலைய பாரு.

கொஞ்ச நேர இடைவேளைக்கு அப்புறம் .

இல்ல, நான் உன்ன நாய் மாதிரி தொடர்ந்துட்டு தான் இருப்பேன் சொன்னாலும் எனக்கு கவலை இல்ல.நான் என்னோட Principlesல strongஆ இருப்பேன்.
காதல எனக்கு நம்பிக்க இல்ல.எங்க அப்பா பார்க்கிற........"அவ lecture  கொடுக்க ஆரம்பிச்சிட்டா.

"அடிப்பாவி,இந்த எலவ 9th stdலே சொல்லிறிந்தா உன் பின்னால இப்படி சுத்திருக்க மாட்டேன்ல.உறுப்படியா படிக்கவாவது செஞ்சிருப்பேன்.இப்போ காதலும் இல்லாம நல்ல collegum இல்லாம....."
கோபத்தில வேற ஏதாவது பேசிட கூடாதுன்னு அங்கருந்து கிளம்பிட்டேன்.ரொம்ப வலிச்சது.

பஸ்ல வீட்டுக்கு திரும்பி போறப்ப அவ பின்னாடி சுத்தி நான் இழந்த நாட்கள் ஞாபகம் வந்தது.

"உன்னை கண்டும் காணாமலும்
வீணாகி போனது
நான் மட்டுமல்ல,
திரும்ப கிடைக்காத நாளும் தான்"

வலில எனக்கு உள்ள இருக்கிற வாலியும் வைரமுத்துவும் அப்படிக்கா எட்டி பார்த்தாங்க..அவங்கள ஒரு Halfம் Half Plate பிரியாணியும் வாங்கி கொடுத்து Off பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் கேட்கறது எல்லாம் அவளோட free அட்வைஸ் மாதிரி இருந்தது.நெவினுக்கு போன் பண்ணி ஒன்னும் விடாம சொன்னேன்.

"மச்சான்,விடுடா.கடவுளுக்கே இது பிடிக்கலடா.அது தான் கட் பண்ணிட்டார்.
நீ அடிக்கடி பார்த்ததா சொன்ன கனவுல அவ அவளோட புருஷன் கூட இருந்திருப்பா.நீ அத கவனிச்சிருக்க மாட்டேடா.............
வாந்தி எடுத்துட்டு அமைதியா தூங்குடா" அவன் சொன்னான்.

ரொம்ப நாளுக்கப்புறம் அவன் சொல்ற வார்த்தைகள் கேட்டது.சொல்ல போனால் எனக்கு அது பிடிச்சது.

கஷ்டபட்டு தூங்க முயற்சி பண்றேன்,வரல.கொஞ்ச நேரத்துக்கப்புறம்,

"pink புடவைல அவ தேவதை மாத்ரி இருந்தா.தேவதை யாரும் பார்த்தது கிடையாது.இருந்தாலும் ஒவ்வொரு காதலனுக்கு மட்டுமே தெரிஞ்ச உருவம் அது.

trainla என்னோட பக்கத்தில உட்கார்ந்திருந்த அவ திடீர்னு கைகள இறுக்கி பிடிச்சு நெஞ்சில தலை சாய்ச்சு படுத்தா.அந்த இறுக்கத்தில இனிமேல் நீ தான்டா என்னோட வாழ்க்கைன்னு அவ சொல்ல நினைச்சிருக்கலாம்.  பதுக்கி வைச்சிருந்த ஆசையோட வெளிப்பாடு அது.

இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு. 

"டக் டக் டக்"

கடமைக்கு கதவ தட்டி, உரிமையோட யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டது.நான் TTEனு நினைச்சு என்னோட e-டிக்கெட் வெளில எடுக்கிறேன்.

பக்கத்தில இருந்தவர் அவரோட டிக்கெட்ட நீட்டுறார்.

"வெங்கடேஷ்,ரேவதி வெங்கடேஷ்.ஓகே.
சார்,உங்க ID கார்டு கொடுங்க." TTE கேட்கிறார்.

ரேவதி அவனோட ID கார்ட தன் Handbagல இருந்து எடுக்கிறா.. "


'தம்பி....தம்பி'

நிமிர்ந்து பார்த்தா எங்க அம்மா நிக்கறாங்க.


"எழுந்திருப்பா,Class போகணும்ல.சீக்கிறோம்".

நம்பினால் நம்புங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயிலில் உள்ள பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓர் ஊர் அது.கன்னியாகுமரி மாவட்டம் பற்றி முழுமையாக அறியாதவர்கள் இன்று வரை நாகர்கோயில் நகரம்,சுற்றுலா தளமான கன்னியாகுமரியை விடவும் சிறிய ஊராகவே நினைத்துக் கொள்கிறார்கள்.இனி அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவும்.

 என்றுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஊரின் ஒரு குறுக்கு சந்தின் முனையில் அமைந்திருக்கும் அந்த வீடு அந்த சந்தின் மொத்த அடையாளமாய் இருக்கிறது.அவ்வீட்டின் வாசலில் வரிசையில் நிற்கும் மக்கள் தங்கள் கைகளில் முட்டையும் அகர்பத்தியும் ஒரு காகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறார்கள்.முட்டையும் பாலும் என்ற இணையை  அதிகம் அறிந்திருந்த எனக்கு முதல் முறை இந்த இணை ஆச்சர்யமாகவே இருந்தது.

வாழ்க நலமுடன் என்று வரவேற்கும் அந்த வீட்டின் முன் நிற்கும் அம்மக்கள் பல சமய மத சித்தாந்தங்கள் சார்ந்தவர்களாக தெளிவாக அடையாளம் தெரிகிறார்கள்.உடையாலும் உறுப்புகளின் அணிகலன்களாலும் ஒருவர் சார்ந்திருக்கும் மதத்தை பெரும்பாலும் இன்றும் நாம் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதாகவே  நான் கருதுகிறேன்.எனினும் சுதந்திரத்திற்கு முன் வங்காளத்திலும் பின்னர் 1990களில் உத்திர பிரதேசத்திலும் மும்பையிலும் தமிழ்நாட்டின் கோவையிலும் இல்லாத மத நல்லிணக்கம் அங்கு இருந்ததாக காணப்பட்டது மகிழ்வுக்கு உகந்ததே.
 
ஆண்கள் பெண்கள் என்ற தனி வரிசை இல்லாமல் இருந்த அந்த வாசலில் எல்லா வயது பிரிவினரும் தென்பட்டார்கள் எனினும் குழந்தைகளை கையில் ஏந்தியபடி நின்றிருந்த இளவயது தாய்மார்களே அதிகம்.நியாய விலைக் கடைகளில் அநியாயமாய் கொள்ளை போகும் தங்கள் நியாயங்களுக்காக வரிசையில் காத்து நின்று பழக்கப்பட்ட கடை நிலை நடுத்தர மக்கள் போல காத்திருக்க அவர்கள் தயாராக இருந்தார்கள்.தெளிவாகக் கூறின்,காத்திருந்து தங்கள் காயங்களை ஆற்றிக்கொள்ள அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டார்கள்.

சுமார் பதினோரு மணி அளவில் உள்ளே வந்த அவர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே சன்னல் வழியாக வெளியில் இருக்கும் கூட்டத்தை பார்க்கிறார்.அவரது முக அசைவுகளில் அதிகமாக இருக்கும் கூட்டத்தை பார்த்த மகிழ்ச்சியும் அதற்கே உண்டான வருத்தமும் கலந்து இருந்தது.அவர் தலைக்கு மேலே இருந்த சிறிய பலகை அவரை 'ஓதுபவர்' என்ற பட்டத்துடன் அவர் தம் பெயரையும் வெளிப்படுத்தியது. 


முதல் ஐந்து பேர் உள்ளே அழைக்கப்பட்டு ஓதுபவர் ஓரத்தில் இருக்கும் மரப்  பலகையில் உட்காருகிறார்கள்.முதலில் கைக்குழந்தையுடன் சென்ற பெண் அவரின் எதிரே இருந்த நாற்காலியில் அமருகிறார்.

தன் குழந்தை ஒரு வாரத்திற்கு மேலாக ஒழுங்காக சாப்பிடுவது இல்லை எனவும் கொதி விழுந்து விட்டதாகவும்  கூறுகிறார்.அவளிடம் முட்டையும் பத்தியையும் பெற்று கொண்ட ஓதுபவர்  ஏதோ மந்திரங்களை உச்சரித்தவராக முட்டையை வைத்து குழந்தை மேல் தடவுகிறார்.பின்னர் முட்டையை அருகில் இருந்த ஒரு பெட்டியில் வைத்துவிட்டு அங்கிருந்து தண்ணீர் எடுத்து அந்த குழந்தையின் முகத்தில் தெளிக்கிறார்.குழந்தைக்கு கொடுக்கப்படும் பாலுடன் இருந்த பால் குப்பியை கேட்டு பெற்றுகொண்டவராய் அதில் மூன்று முறை தனது எச்சில்லை துப்புகிறார்.இதற்கான கூலியாக 50 ரூபாய் பெற்று கொண்டதும் அடுத்தவர் உள்ளே அழைக்கபடுகிறார்.

அடுத்து வந்தவர் தன் குழந்தைக்கு உடலில் புண்கள் இருப்பதாக சொல்லவும் அவருக்கும் இது போல முட்டை தேய்த்தல் வைத்தியம் தொடர்கிறது.இப்படி பெரும்பாலும் குழந்தையுடன் வந்தவர்களுக்கு இந்த வைத்தியம் தொடர்ந்தது.


இதற்கிடையில் ஒரு பெண்மணி தான் கையில் வைத்திருந்த முட்டையை கீழே தவற விட ஓதுபவர் சினங்கொண்டவராய் அவரை ஒருமையில் கோபிக்கிறார்.இனி எத்தனை சாத்தான்கள் இங்கே வர போகிறதோ தனக்கு தெரியவில்லை,அவை முட்டையில் எளிதாக பரவக்கூடும் என்று அங்கு  இருப்பவர்களின் தைரியத்தை சோதிக்கிறார் ஓதுபவர்.


விழுந்த முட்டை அப்புறப்படுத்தப்பட்டு அந்த இடம் சுத்தப்படுத்தும் வரை மயான அமைதி அங்கு நிலவியது.அடுத்து ஒரு பெண் சுமார் 25 வயது மதிக்க தக்க தன் மகளுடன் அவர் எதிரே உட்காருகிறார்.தன் மகள் யாரிடமும் கடந்த சில மாதங்களாக தெளிவாக பேசுவதில்லை என்றும் பெண் பார்க்க வந்தவர்களிடம் கோபித்து கொள்கிறாள் என்றதும் இதனால் அவளுக்கு திருமணம் தடைபடுவதாக கூறுகிறாள்.


முட்டையை வாங்கி தேய்க்க தொடங்கிய ஓதுபவர் தீடிரென்று குனிந்திருந்த அந்த பெண்ணின் முகத்தை உயர்த்துகிறார்.அவள் சற்றே ஏளனத்துடன் சிரித்தவளாக அவரைப் பார்க்கிறாள்.கண்ணை மூடி மந்திரம் உச்சரிக்க அவர் தொடங்கியதும் அந்த பெண் திமிரியவளாய் "டேய்! என்னை விடுடா,ராஸ்கல்" என்கிறாள்.ஏற்கனவே பயந்திருந்த சுத்தி இருந்தவர்கள் இந்த வார்த்தைகளால் இன்னும் முகத்தில் பயத்தை தெரியப் படுத்தினார்கள்.


ஓதுபவர் வேகமாய் உச்சரிக்க அந்த பெண் "ப்ளீஸ்,என்ன விட்டுடு" என்கிறாள்.ஓதுபவர் அவளிடம் சரி உன்னை நான் விட்டு விடுகிறேன்,இன்னும் 5 நிமிடங்களில் நீ இந்த உடலை விட்டு போய்விடு என்கிறார்.சில நிமிட அமைதிக்கு பின் அந்த பெண் மறுபடியும் சிரிக்க,ஓதுபவர்   உரத்த குரலில் "உன்னை போல் ஆயிரம் பேரை கண்டவன் நான் என்னிடமே உன் விளையாட்டா?" என்கிறார்.எதிரில் இருந்து மறுபடியும் ஏளன சிரிப்பு.


அருகில் இருந்து ஒரு நீண்ட தட்டையான மர அளவுகோலை(நடராஜ் wooden Scale) கையில் எடுத்து கொண்ட ஓதுபவர் அந்த பெண்ணின் தலை முடியை முதலில் பிடிக்கிறார். அவளின் நிமிர்த்தி வைத்த கைகளில் தொடர்ந்து அவர் அடித்துக்கொண்டே "யார் நீ?" என்கிறார்.எதிர் முனையில் அழுகை சத்தம் வர,யாரென்று பார்த்தால் அந்த பெண்ணின் தாயார் மகளின் நிலைக்கண்டு அழுகிறார்.மர பலகையில் இருந்தோர் அனைவரும் பயத்துடன் அவளை பார்க்கிறார்கள்.எனினும் அந்த இளம் பெண்ணின் அழுகை குரலோ வலித்ததாய் வெளிப்பாடோ அவளிடம் தெரியவில்லை.  

நேரம் செல்ல செல்ல தன் கேள்விக்கு பதில் இல்லாததால் ஓதுபவரின் அடியின் வீரம் கூடுவதை உணர முடிந்தது."நான் பாஸ்கர்.அடிக்காதீங்க ப்ளீஸ்" அந்த பெண் சொல்கிறாள்.ஓதுபவர் முயற்சி விடாதவராய் "எப்படி இவள் உடலில் வந்தாய்?" என்கிறார்.அதற்க்கு அவள் "மாலை 6 மணி அளவில் ஒரு நாள் இவள் மல்லிகை பூ வைத்து சாலையில் வந்தாள் " என்கிறாள்.

"ஏன் வந்தாய்?" என்ற அவர் கேள்விக்கு அது "தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,தனது காதலி வீடு அருகில் இருப்பதால் இவள் உடலில் வந்ததாகவும்,தன் காதலியை பார்த்து பேச வேண்டுவதாகவும் " சொன்னது.பயத்தை அளக்கும் கருவி இருந்திருந்தால் அருகில் இருந்தோர் இந்த கணம் பயத்தின் உச்சியை அந்தக் கருவியில் காண்பித்திருப்பார்கள்.ஓதுபவர் மறுபடியும் முட்டையை உடைத்த அந்த பெண்மணியிடம் "பார்த்தியா,நான் சொன்னேன் இல்ல.சாத்தான் சுத்துறான் "என்கிறார்.எனினும் இந்த கணம் அவர் சாதித்தது போல் முகம் கொடுத்தார்.


அவளின் முடியை இன்னும் இறுக்கி பிடித்தவராய்,ஓதுபவர் அடியின் வீரியத்தை கூட்ட அந்த பெண் ஓவென்று அழுகிறாள் திடீரென.எல்லாம் முடித்தவராய் அந்த பெண்ணின் தலையில் இருந்து இரண்டு நீண்ட முடிகளை பிய்த்து சுருட்டி வைத்து தன் அருகில் இருந்த ஒரு கருப்பு கயிற்றை அவள் கையில் கட்டுகிறார்.அந்த பெண்ணும் தொடர்ந்து அழ,அவளிடம் "தான் யார்?" என்கிறார்.அவள் "நான் டைசி"என்றதும்,அவள் தாயார் சில நூறு ரூபாய் நோட்டுகளை ஓதுபவுருக்கு கூலியாக்கினார். 

வழக்கம் போல் அடுத்தவர் அவர் எதிரே வந்து உட்கார,வெளியில் இருந்த நான் அறிவையும் அறிவியலையும் ஒதுக்கி வைத்துவிட்டு பயத்துடன் ஓதுபவரை பார்த்து கொண்டிருந்தேன். 

  

Wednesday, February 1, 2012

காட்டாத காதல்

எது தான் காதல்
இதுவரை தெளிவில்லை
இருந்தாலும் உன் முகம்
அடிக்கடி குழப்புகிறது.

Cocaine உண்டால் தான்
Adrenaline அதிகம் சுரக்கும்
உன் பளிங்கு முகம் பார்த்தாலே 
சுரப்பதாய் எனக்கிருக்கும்.
பொத்தி வைத்த போதை நீ
பொங்கி வந்தாய் பாதையில் நீ.
(மன்னிக்க. பொங்கி வரும் Beer Bottle நீ!)

கண்டதும் காதல்
சத்தியம் சாத்தியம்
விஞ்ஞானமே சொன்னாலும்,
தெளிவாய்க் குழம்பும்.
காந்த 'கண்'ணகி நீ
தினம் தினம் என்னை
ஏங்க வைக்கும் தீ.

கட்டாயக் கேள்விக்குக்  கூட
பரிட்சையில் பதில் இல்லை
உன் கார்கூந்தல் நினைத்தாலே
பக்கம் பக்கமாய் மை தீரும்.
அதிகமாகும் கவிஞர்களின்
கரையாத கருப்பொருள் நீ.

சுட்டெரிக்கும் சூரியன் கண்டால்
சினங்கொண்ட உன் பார்வை புரியும்
நிறுத்தாமல் மழை வந்தால்
நில்லாத உன் பேச்சாய் தெரியும்.

காதல் கவிதை படித்தால்
உன் முகம் வந்து போகும்
என் மகளின் கொலுசு ஒலி
உன் சிரிப்பை சொல்லி செல்லும்.

சில சில குறுந்தகவல்கள் (SMS)
உன் சிணுங்கல் சத்தம் சொல்லும்
பல பல கனவுகளில்
உன் நினைவுகள் நிறைவு தரும்.

இது என் காதலென்று
சொல்லாததின் சௌகர்யம் தெரியும்.
சொல்லி நீ மறுத்தால்
நினைவுகள் செத்து மடியும்.

Tuesday, January 31, 2012

பயத்துடன் உன் நண்பன்

mansion இல் இருந்தாலும்
மாளிகையாய் வாழ்ந்தோமே

உணவுக்கே வழியில்லை
'தம்'முக்கு தடையில்லை
ஒரு 'தம்'மில் பல நாட்கள்
உணவாக உண்டோமே

வேலையோடு வரும் நண்பன்
தருவானே முழு இன்பம்
குவாட்டரும் கும்மாளமுமாய்
மறந்திடுமா உனக்கு மட்டும்? 

வேலையில்லா பட்டதாரிக்கு
உதவித்தொகை வழங்கியது
பெட்டிக்கடை பாய் தானே

வறட்சிக் காரணமாய்
வாரா நம் கடன்களை
தள்ளுபடி செய்த
வள்ளலும் அவர் தானே

அருகிலிருந்த திருமண மண்டபம்
அழைக்காத வீட்டிற்க்கும்
அன்போடு (மட்டும்) போவோமே
"யாதும் ஊரே,யாவரும் கேளிர்"
புரிந்தவர் நீயும் நானும்.

அக்காவின் திருமணத்திற்கு 
பக்காவாய் புறப்படுவோம்
பல வாரம் முன்னாலே
பேருந்தின் பின் சீட்டில்

விமானத்தில் பறக்க முடிந்தும்
நேரமில்லை என்பேனே
இன்று உன் மின்னஞ்சல் 
அழைப்பு பார்த்தும்    

சென்னை தமிழில்
செழுமையான உரிமையுடன்
கோபித்தோம்  நாம் அன்று
"Hey Buddy" என்றாலும்
உயிரில்லை பேச்சில் இன்று

அன்று
பாக்கெட்டில் பணமில்லை
இருந்தும் பயமில்லை

இன்று
நேரமும் நேர்மையும்
நெருங்கவே முடியாத
பல மடங்கு கடமையுண்டு
பக்கெட் நிறைய பணமுண்டு

மொத்தத்தில் பயமுண்டு.

Monday, January 30, 2012

what is காதல்?

என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?

காதலியை மட்டுமல்ல
காதலையும் சேர்த்தே
எனக்கு அறிமுகம் செய்தவன்
நீதானே?

"கிட்டத்து பார்வை" பாவை அவள்,
முதல் பெஞ்சின் நெருங்கிய தோழி.  
எங்கோ தூரத்தில் "மாப்பிளை பெஞ்சில்"  
உன்னோடு நான்.

திரும்பும் அவள் 
தன் தோளைப் பார்த்தாலும்
தோழியைப் பார்த்தாலும்
அவள் தன் கூந்தலின்
பொடுகையே பார்த்தாலும் 
"மச்சான்,உன்ன பார்க்றாடா அவ"
என்று அசராமல் சொல்வாயே.

பொய்யாக இருந்தாலும்
சௌகர்யமாய் இருந்தது
பிடிக்கவும் செய்ததே.

என்னிடம் அவள் பேசும்போது
வெட்கப்பட்டாள் என்றாய்.
"நாணம் பெண்ணின் முதல் மொழி" என்று 
நீ கவிஞன் ஆனாய். 
நான் அவள் ரசிகன் ஆனேன். 

"உன்ன follow பண்றா மச்சா"
நீ சொன்ன போது
தெரியாமல் போனதே
நான் நின்றது
வகுப்பறை வாசல் என்று.


என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?


ஓரிரு நாட்கள்
ஒரே நிறத்தில்
அவளும் உடை அணிய
"சத்தியமா சொல்றேன்,தெய்வீக காதல்"என்றாய்.      
காற்றில் மிதந்தேன்
ஆக்சிஜன் குறைவதும்  புரியாமல்.

அவளின் முகம்
என் கணினியின் முகமாக்கி
"Romantic Look da"
நீ தான் சொன்னாய்.
முழித்திருக்க கூடாதா?
முட்டாள் நான்.

சரி,தெளிவான அறிகுறிகள்,
இது தான் காதல் என்று
அவளிடம் சொன்ன போது
எது தான் காதலென்று
அவளும் சொல்லவில்லை

இருந்தாலும்
கேவலமாய் சொன்னாளே
அதுக்கூட மறந்ததடா

"மச்சான்,
Shift + Del, சிம்பிள்டா"
நீ சொன்னது மறக்காது.

என் காதல் என் காதல்
என்றே நான் சொன்னாலும்
அது நம் காதல் தானே
நண்பா.

நீ இல்லாமல் 
எனக்கேது காதல்?

Friday, January 27, 2012

மகள்

காலை நிலா
இரவு சூரியன்
இயற்கையின் ஆச்சர்யம்
எங்கள் வீட்டு அதிசயம்

சுடாத வெளிச்சம் 
நடுங்காத குளிர்
வானத்து முகில்
முகில் தெளிக்கும் மழை
மழை நனைக்கும் நிலம் 
நிலத்து நந்தவனம்
நந்தவன தென்றல்
தென்றலின் தீண்டல்

விரிவாக சொன்னாலும் 
நடமாடும் ஐம்பூதம்

பொக்கை வாய் சிரிப்பு
எட்டிப் பார்க்கும் பற்கள்
பொய் பேசாத நா
சாயம் பூசாத இதழ்
வஞ்சம் இல்லாத கண்
ஜப்பானிய மூக்கு
வடஇந்திய தமிழ் 

தடுமாறும் நடை
நிறைவான எடை
இல்லாத இடை
தேவதையாய் உடை

கால் நூற்றாண்டு கனவு
வருத்தாத நினைவு
ஒறுத்தாத உறவு

அடிக்கடி மாறாத  
என் மின்னஞ்சலின்
தற்போதைய திறவுசொல்


நானும் வந்துட்டேன் 
mindla வச்சிருக்கேன் 


ஏன் இப்படி

செல்லமே

Thursday, January 26, 2012

அண்ணா

என் தந்தை விந்திட்ட,
எனக்கு முன்னரே 
மண் பார்த்த
மூத்த விதைகள் 

என் தாயின்
தொப்புள் கொடியின்
முதல் வரிசை மலர்கள்

பத்து மாதம் வாடகையின்றி
நான் இருந்த வீட்டின் 
மூத்த குடிகள் 

தாய்ப்பாலை நானும் குடிக்க 
மிச்சம் வைத்த நல்லவர்கள் 

பண்டம் தின்ன 
சண்டை வந்தாலும்
கடைக்குட்டி என் பங்கை
குறைக்க முயலாதவர்கள்
முடியாதவர்கள்

நண்பர்கள் நான் தேட
வாய்ப்பு தராத நண்பர்கள் 

அண்ணன் என்று நான் 
அழைக்காத போதும்
படைக்கு அஞ்சாதவர்கள்,
என் தமயன்கள்.


அவள்

அன்பின் அகரம்
அடக்கத்தின் உயரம்

"மிச்ச(ம்)"த்தில் உச்சம்
அச்சத்தில் துச்சம்

கடவுளின் அடியாள்
கணவனுக்கும் அடியாள்

மகளின்றி வருந்தியவள்
வருத்தத்தில் மெலிந்தவள்

பேத்தியை தோழியாக்கியவள்
தோழியே வாழ்வாக்குபவள்

தோற்க பழகியவள்
தோற்றே வென்றவள்








அவரின் அடையாளம்

கறுப்பு தோல்
வெள்ளை வேட்டி 

சுருண்ட முடி
முறுக்கிய மீசை

கதரில் உடை
கம்பீரமாய் நடை 

1960's Royal Enfield

கொஞ்சம் கோபம்
மிஞ்சும் பாசம்

பல சமயம் "ஆணை"யர்
புரிய வைத்தால் ஊழியர்












Thursday, January 19, 2012

தோற்க கற்றவள்

கிடைத்ததை விரும்பக் கற்றவள் 
விரும்பியது கிடைத்தால் 
அவள் உள்ளத்து உணர்வு? 

புரிந்தது இன்று . 

"அப்பம்மா" என்றே
அழைத்த பேத்தியை
அன்புடன் அள்ளிய என் 
அம்மாவைக் கண்டதும்.

  




Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...